tamilnadu

img

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 12- வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள், 17(பி) குற்ற  குறிப்பாணைகளை திரும்ப பெற வேண்டும்  என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலி யுறுத்தினர். சட்டப்பேரவையில் வியாழனன்று (மார்ச் 12)  பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை  மீதான விவாதம் வருமாறு:  க.பொன்முடி (திமுக): பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மத்திய பட்டியலுக்கு கொண்டு  சென்றுவிடுமோ என்ற அச்சம் உள்ளது. அதற்கேற்ப மத்திய அரசு 70 புதிய கல்லூரி களை மாநிலங்களில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கல்லூரி தொடங்கும் உரிமை மாநிலங்களிடம் உள்ளது. எனவே, மாநில உரிமையை ஆக்கிரமிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும். 2023 தொலை நோக்கு திட்டத்தின்படி பள்ளிக்கல்விக்கு 58ஆயிரத்து 100 கோடி  ரூபாய் செலவிடப்படும் என்று அறிவிக்கப் பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்டு 8 ஆண்டு களை கடந்துள்ளநிலையில் எவ்வளவு தொகை  செலவிடப்பட்டுள்ளது? அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள ஊழியர்களை (நான் டீச்சிங் ஸ்டாப்) அரசு வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்: 125பேர் தற்காலிக ஊழியர்க ளாக உள்ளனர். இதேபோன்ற 13 பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றுகின்றனர். அவர்கள் தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. பொன்முடி: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட  ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். சென்னை பல்கலைக் கழக துணை வேந்தரை தேர்வு செய்யும் குழுவில், ஜேஎன்யு  பல்கலைக் கழக துணைவேந்தராக உள்ள ஆர்எஸ்எஸ் நபரை நியமித்திருப்பது சரியல்ல.  இது தொடர்பாக ஆளுநருக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். விஜயதாரணி (காங்): 2019 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான வழக்குகள், 17(பி) குற்ற குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு மடிக்கணினி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன்: பெற்றோர்கள் ஆங்கில வழி  கற்றலை விரும்புவதால் தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆயிரம் பள்ளிகளில் தொடங்க உள்ளோம். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மடிக்  கணினி வழங்கியதுபோன்று, பட்டதாரி ஆசிரி யர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.

விஜயதாரணி: கல்லூரிகளில் உள்ள சுழற்சி முறை (2ஷிப்ட்) ஒன்றாக்கப்படுவதால் மாணவர்களும், கவுரவ ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள். பேராசிரியர் நியமனம் செய்யும்போது, 2 ஆயிரத்து 300 கவுரவ விரிவு ரையாளர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும். அண்ணாபல்கலைக் கழகத்தை சீர்மிகு பல்கலைக் கழகமாக மாற்றி னாலும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை விட்டுத்தரக் கூடாது. அமைச்சர் கே.பி.அன்பழகன்: அண்ணா பல்கலைக் கழகத்தை சீர்மிகு பல்கலைக் கழகமாக மாற்றுவதில் உள்ள  சாதக பாத கங்களை ஆராய 5 அமைச்சர்கள் கொண்ட  குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பெயரை  மாற்ற மாட்டோம். 69 விழுக்காடு இடஒதுக் கீட்டை ஒருபோதும் விட்டுத்தரமாட்டோம். அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்க மாட்டோம். கல்லூரிகளில் 2 ஷிப்ட்  முறை ஒன்றாக்குவதால் மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உட்பட யாருக்கும் பாதிப்பு  வராது. புதிதாக பேராசிரியர்கள் நியமிக்கும் போது கவுரவ விரிவுரையாளர்களும் கணக்கில்  எடுத்துக் கொள்ளப்படுவார்கள். எஞ்சியுள்ள வர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும்.